இப்போதெல்லாம் இளம் வயதிலேயே மூட்டுவலி வருவது அதிகரித்துவிட்டது. சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ளாததும், சரியான உடற்பயிற்சி இல்லாததும்தான் மூட்டுவலிக்கு பிள்ளையார் சுழி போடுகின்றன என்கிறார் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியின் ரொமடாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி. அவரிடமிருந்து மூட்டுவலி மற்றும் அது தொடர்பாக ஒரு டிவெண்டி 20 கேள்வி பதில்.
பொதுவாக மூட்டு என்பதே முழங்காலில் உள்ள மூட்டு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு எலும்பும் இன்னொரு எலும்பும் கூடுகிற பகுதிகள் எல்லாமே மூட்டுதான். அப்படி நம்முடைய உடலில் விரல்கள், கால்கள், கழுத்து, முதுகுத் தண்டு என நிறைய இடங்களில் மூட்டுகள் இருக்கின்றன. எல்லா மூட்டுகளிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. இந்த ஜவ்வு தேயும்போதுதான் எலும்பு மூட்டுகள் உராய்ந்து வலியை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்க்கு ஆங்கிலத்தில் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (ளிstமீஷீணீக்ஷீtலீக்ஷீவீtவீs) என்று பெயர். இதை கவனிக்காமல் அப்படியே விட்டால் மூட்டு தேய்ந்து, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வரை போகலாம்.